/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அக்னி கடந்தும் அதிகரிக்கும் வெயில் அக்னி கடந்தும் அதிகரிக்கும் வெயில்
அக்னி கடந்தும் அதிகரிக்கும் வெயில்
அக்னி கடந்தும் அதிகரிக்கும் வெயில்
அக்னி கடந்தும் அதிகரிக்கும் வெயில்
ADDED : ஜூன் 02, 2024 04:20 AM
சித்தையன்கோட்டை: கன்னிவாடி, செம்பட்டி, சித்தையன்கோட்டை, சின்னாளபட்டி பகுதியில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த வாரத்தில் சில இடங்களில் மட்டும் லேசான சாரல் இருந்த நிலையில் போதிய மழையின்றி பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
தற்போது பகல் நேரங்களில் வெயில் அதிகரித்துள்ளது. காலை 9 :00 மணிக்கு துவங்கும் வெயிலின் வெம்மையான சூழல், இரவு 7 வரை நீடிக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பகலில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது .சில இடங்களில் மாலை நேரங்களில் மேகமூட்டம் சூழ்ந்து பலத்தகாற்று வீசுகிறது.
என்.பஞ்சம்பட்டி, வக்கம்பட்டி, வீரக்கல், கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, சித்தையன்கோட்டை, தருமத்துப்பட்டி பகுதிகளில் அக்னி நட்சத்திர காலம் முடிந்தும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இரவு நேர மின்தடையும், வெப்பச்சூழலும் மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.