
உதவி செய்வது நோக்கம்
சந்திரன், தலைவர், திண்டுக்கல்: சங்கம் ஆரம்பித்து 75 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு தினமும் காலையில் 50 ஏழை மக்களுக்கு மூலிகை கஞ்சி வழங்குகிறோம். 13 ஆண்டுகளாக ஊனமுற்றோர், முதியோர்கள் என 145 பேருக்கு தினமும் மதியம் சாப்பாடு கொடுக்கிறோம். வள்ளலார் வழியை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.
மனநிறைவு இருக்கும்
ராமலிங்கம், செயலாளர், திண்டுக்கல்: ஆங்கில மாதம் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மன அமைதிக்காக ஏராளமான மக்கள் பங்கேற்று நலம்பெறுகின்றனர்.
மார்கழியில் வழிபாடு
மோகனவேல், பொருளாளர், அறிவுத்திருக்கோயில், திண்டுக்கல்: மது,மாது, கொலை, கொள்ளை, பொய் போன்ற 5 கொடிய செயல்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காக வள்ளலார் போராடினார்.
ஒழுக்கங்களை அறிய வேண்டும்
ரவி, ஸ்ரீவாசவி தங்கமாளிகை உரிமையாளர், திண்டுக்கல்: வள்ளலாரின் கொள்கைகள் திண்டுக்கல் மக்கள் மத்தியில் செல்வதற்காக இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது.
கல்வி வழங்குகிறோம்
சிவராம், சுபம் பேட்ரிக்ஸ், திண்டுக்கல்: இந்த சங்கத்தின் மூலம் பல ஏழை குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது. வள்ளலாரை மையமாக கொண்டு இங்கு வாழ்ந்த சுவாமி சரவணானந்தா பல நுால்களையும் வெயிட்டுள்ளார்.