ADDED : ஜூலை 07, 2024 02:52 AM
சாணார்பட்டி: சாணார்பட்டி கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் அரவிந்த், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள் நல்லேந்திரன், முனியப்பன், குணசீலன் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விலங்குகள் மூலம் பரவும் நோய்கள், தடுப்பு முறைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.