/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஹாயாக சுற்றும் மாடுகள்... கொட்டமடிக்கும் கொசுக்கள் தினம் திணறலில் திண்டுக்கல் 3வது வார்டு மக்கள் ஹாயாக சுற்றும் மாடுகள்... கொட்டமடிக்கும் கொசுக்கள் தினம் திணறலில் திண்டுக்கல் 3வது வார்டு மக்கள்
ஹாயாக சுற்றும் மாடுகள்... கொட்டமடிக்கும் கொசுக்கள் தினம் திணறலில் திண்டுக்கல் 3வது வார்டு மக்கள்
ஹாயாக சுற்றும் மாடுகள்... கொட்டமடிக்கும் கொசுக்கள் தினம் திணறலில் திண்டுக்கல் 3வது வார்டு மக்கள்
ஹாயாக சுற்றும் மாடுகள்... கொட்டமடிக்கும் கொசுக்கள் தினம் திணறலில் திண்டுக்கல் 3வது வார்டு மக்கள்

தீர்வு வேண்டும்
வீரம்மாள்,4வது குறுக்கு தெரு,ஆர்.எம்.காலனி: எங்கள் தெரு பகுதியில் பல ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் இருக்கும் குடிநீர் தொட்டியால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எந்த வாகனமும் தெருக்களுக்குள் வர முடியாமல் தவிக்கிறோம். அதிகாரிகளிடம் புகாரளித்த போதிலும் நடவடிக்கை இல்லை. எங்கள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசு மருந்து அடியுங்க
முத்துலட்சுமி,4வது குறுக்கு தெரு,ஆர்.எம்.காலனி: எங்கு பார்த்தாலும் கொசுக்களின் கூடாரமாக சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்குகிறது. பல முறை புகாரளித்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை. மழை நேரங்களில் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு ரோடு முழுவதும் கழிவுநீர் குளம்போல் ஓடுகிறது. இதைக்கட்டுப்படுத்த வேண்டும். கொசுவை கட்டுப்படுத்த வாரம் இருமுறை கொசு மருந்து அடிக்க வேண்டும்.
கால்நடைகளை பிடிக்கலாமே
பிரேம்குமார்,4வது குறுக்கு தெரு,ஆர்.எம்.காலனி: 3 வது வார்டை சுற்றிலும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமலிருப்பதால் தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. ரோட்டில் குழந்தைகள்,வயதானவர்கள் நடமாடவே முடியவில்லை. அந்த அளவிற்கு மாடுகள் மக்களை அச்சுறுத்துகிறது. இதைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதாரமாக வைத்துள்ளேன்
இந்திராணி,கவுன்சிலர், (தி.மு.க.,): என் வார்டு மக்களை நல்ல முறையில் கவனித்து கொள்கிறேன். எந்த குறையாக இருந்தாலும் உடனே சரி செய்து கொடுக்கிறேன். சாக்கடைகளில் முறையாக துார்வாரப்படுகிறது. சேதமான ரோடுகளை சீரமைக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் சீரமைக்கப்படும். ரேஷன் கடை,சமுதாயக்கூடம் என் வார்டுக்கு வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறேன். வார்டை சுகாதாரமாக வைத்துள்ளேன் என்றார்.