ADDED : ஜூலை 22, 2024 05:36 AM

பழநி: பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் நேற்று அதிகளவில் குவிந்தனர். சுவாமி தரிசனம் செய்ய வின்ச்,ரோப்கார் மூலம் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்தனர். இந்நிலையில் பழநி சுற்று வட்டார பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்ததால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப் கார் சேவை சிறிது நேரம் தடைபட்டது.
அய்யம்புள்ளி ரோடு பகுதியில் நீதிமன்ற உத்தரவின் படி வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. பூங்கா ரோடு, அருள் ஜோதி வீதி பகுதிகளில் போலீசார் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை முறைப்படுத்தினர்.