ADDED : ஜூலை 25, 2024 06:44 AM
திண்டுக்கல்: காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் திருச்சி ரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்அரசு ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் வட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் பூசாரி, மாவட்ட தலைவர் முபாரக் அலி, துணை தலைவர்கள் ஜெசி, ராஜமாணிக்கம் பங்கேற்றனர்.