/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தடுப்பணை உயரம் குறைவால் வறண்ட அய்யலுார் குளம் தடுப்பணை உயரம் குறைவால் வறண்ட அய்யலுார் குளம்
தடுப்பணை உயரம் குறைவால் வறண்ட அய்யலுார் குளம்
தடுப்பணை உயரம் குறைவால் வறண்ட அய்யலுார் குளம்
தடுப்பணை உயரம் குறைவால் வறண்ட அய்யலுார் குளம்

குளத்தை மீட்க சட்ட போராட்டம்
எஸ்.பி.செம்பன், விவசாயிகள் சங்க தலைவர், அய்யலுார்:1905ல் குளத்தின் பரப்பளவு 37 ஏக்கராக இருந்து கால போக்கில் சுற்றிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து நீர் பிடிப்பு பரப்பு வெகுவாக குறைந்துள்ளது. தும்மனிக்குளம் மூலம் 1500 ஏக்கருக்கு மேல் நிலங்கள் பாசன வசதி பெற்றது. கெங்கையூர் தடுப்பணையின் உயரம் குறைவாக இருப்பதால் உள்பகுதியில் மண் கரை அமைத்தால் மட்டும் நீர் குளத்திற்கு செல்லும் நிலை உள்ளது. குளத்தை மீட்க பல ஆண்டுகளாக சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
-உயரமாக்குவது அவசியம்
எஸ்.மகிடேஸ்வரன், நீர்நிலை ஆர்வலர், அய்யலுார் : தடுப்பணையை முறையாக மறுகட்டமைப்பு பணி செய்து உயரமாக்க வேண்டியது அவசியம். ரோடு அமைந்ததால் குறுகிய இடங்களில் தனியார் இடங்களை பெற்று தடையின்றி நீர் செல்லும் வகையில் ஓடையை அகலமாக்குவது அவசியம். நில அளவீடு பணிக்கான 'டோட்டல் ஸ்டேஷன்' கருவி மூலம் குளத்தை அளந்தபோது 37 ஏக்கருக்கு பதில் 22 ஏக்கர் நிலமே நீர்பிடிப்பு பகுதியாக இருப்பது தெரிந்தது. ஒவ்வொரு முறையும் தடுப்பணைக்குள் மண் கரை அமைத்தால் மட்டுமே நீர் குளத்திற்கு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஆற்றில் நீர் இருந்தபோது மண் கரை அமைக்க தாமதம் ஆனதால் குளத்தை நிரப்ப முடியாமல் போனது.