Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காமராஜ்நகர் பத்திரகாளியம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் அக்னிசட்டி,பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

காமராஜ்நகர் பத்திரகாளியம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் அக்னிசட்டி,பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

காமராஜ்நகர் பத்திரகாளியம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் அக்னிசட்டி,பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

காமராஜ்நகர் பத்திரகாளியம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் அக்னிசட்டி,பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

ADDED : ஜூலை 04, 2024 02:33 AM


Google News
Latest Tamil News
நத்தம்: நத்தம் காமராஜ்நகர் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னிசட்டி,பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக்கோயில்விழா ஜூன் 13ல் முகூர்த்த கால் நடுதல், ஜூன் 18ல் அழகர் மலை தீர்த்தம் கொண்டு வந்து காப்புக் கட்டுகளுடன் தொடங்கியது. ஜூன் 21ல் அம்மன் குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் நகர்வலம், ஜூன் 30 இரவு அம்மன் குளத்தில் கரகம் ஜோடிக்கப்பட்டு மேளதாளம் முழங்க கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அக்னி சட்டி , பால்குடம், அழகு குத்தி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து க அம்மன் பூஞ்சோலை செல்தல் , மஞ்சள் நீராட்டமும் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us