/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஐ.ஆர்.டி.சி.,யிடம் உரிமம் பெறாமல்,கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட் விற்றவர் கைது ஐ.ஆர்.டி.சி.,யிடம் உரிமம் பெறாமல்,கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட் விற்றவர் கைது
ஐ.ஆர்.டி.சி.,யிடம் உரிமம் பெறாமல்,கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட் விற்றவர் கைது
ஐ.ஆர்.டி.சி.,யிடம் உரிமம் பெறாமல்,கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட் விற்றவர் கைது
ஐ.ஆர்.டி.சி.,யிடம் உரிமம் பெறாமல்,கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட் விற்றவர் கைது
ADDED : ஜூலை 23, 2024 08:56 PM

திண்டுக்கல்:மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஆர்.டி.சி.,யிடம் முறையான உரிமம் பெறாமல் கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட்டை திண்டுக்கல்லில் 6 மாதமாக பயணிகளிடம் விற்பனை செய்தவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
திண்டுக்கல் முத்துநகரை சேர்ந்தவர் கண்ணன்56. இவர் முத்துநகர் பகுதியில் நெட் சென்டர் நடத்துகிறார். இங்கு ரயில் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவும் செய்து கொடுக்கிறார். இவர் 6 மாதமாக மத்திய அரசு,ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஆர்.டி.சி.,யிடம் முறையான உரிமம் பெறாமல் இவரிடம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக பணம் வசூலித்து டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தார். தொடர்ந்து ஐ.ஆர்.டி.சி., நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்தி கொண்டிருந்தார்.
இதுகுறித்து டில்லியில் உள்ள ஐ.ஆர்.டி.சி.,தலைமை நிர்வாகத்திற்கு தெரியவர அவர்கள் சம்பந்தபட்டவர் எங்குள்ளார் என்பது குறித்தும் அவர் எந்த ஐ.டி.,யை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்கிறார் என்பதும் குறித்தும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல்லிலிருந்து டிக்கெட்
முன்பதிவு செய்யப்படுவது தெரிந்தது. டில்லி நிர்வாகம் உடனடியாக மதுரை ஸ்பெஷல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்களும் திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து திண்டுக்கல் முத்துநகரில் தன் வீட்டிலிருந்த கண்ணனை,கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.