ADDED : ஜூலை 05, 2024 05:55 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் தனியார் பஸ் டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். எஸ்.ஐ.,திலிப் முன்னிலை வகித்தார்.
தனியார் பஸ்களை விபத்து பகுதிகளில் வேகமாக ஓட்டி செல்லக்கூடாது.
அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது. பஸ் ஓட்டும்போது அலைபேசியை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.