ADDED : ஜூன் 17, 2024 12:27 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் - பழநி ரோடு முருகபவனம் பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது.
இங்கு வெளி மாவட்டத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு வாகனம் வந்தது. விடுமுறை தினம் என்பதால் ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் சரக்கு வாகனம் நிறுவனத்தில் வெளியில் லோடுடன் நின்றது. மாலை திடிரென வாகனத்தின் முன் பகுதியிலிருந்து புகையாக வந்து தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.