/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ --குடிநீர்,தெருவிளக்கு,ரோடு இல்லாத சீவல்சரகு ஊராட்சி --குடிநீர்,தெருவிளக்கு,ரோடு இல்லாத சீவல்சரகு ஊராட்சி
--குடிநீர்,தெருவிளக்கு,ரோடு இல்லாத சீவல்சரகு ஊராட்சி
--குடிநீர்,தெருவிளக்கு,ரோடு இல்லாத சீவல்சரகு ஊராட்சி
--குடிநீர்,தெருவிளக்கு,ரோடு இல்லாத சீவல்சரகு ஊராட்சி

--பயன்படுத்த முடியாத குடிநீர்
என்.சக்திவேல், நெசவு தொழிலாளி, ம.பொ.சி., காலனி : 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்கின்றனர். அதை குடிக்க பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. தினமும் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை தொடர்கிறது. நெசவு செய்வதன் மூலம் கிடைக்கும் கூலிப்பணத்தில் வாரந்தோறும் 300 ரூபாய்க்கு மேல் குடிநீருக்காக மட்டுமே செலவு செய்து வருகிறோம். ரோடு சேதமடைந்துள்ளதால் நெசவு பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.
உரிமை தொகை கிடைக்கல
முத்து, கூலி தொழிலாளி, நெசவாளர் காலனி : நெசவாளர்கள் மட்டுமின்றி கூலித்தொழிலாளர்களும் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் சிரமத்தில் உள்ளனர். எந்த ஒரு நலத்திட்டமும் இப்பகுதியில் முறையாக நிறைவேற்றப்படுவது இல்லை. பலமுறை முதியோர் உதவித் தொகை உட்பட அரசு நலத்திட்டங்களுக்கு மனு கொடுத்த போதும் நடவடிக்கையின்றி கிடப்பில் விட்டு விடுகின்றனர். தெருவிளக்குகள் பற்றாக்குறையாக உள்ளது. பெண்கள் பலருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை.