/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ --பெயரளவில் கூட அடிப்படை வசதிகள் இல்லை சஞ்சய் காந்தி நெசவாளர் காலனியில் நீடிக்கும் அவலம் --பெயரளவில் கூட அடிப்படை வசதிகள் இல்லை சஞ்சய் காந்தி நெசவாளர் காலனியில் நீடிக்கும் அவலம்
--பெயரளவில் கூட அடிப்படை வசதிகள் இல்லை சஞ்சய் காந்தி நெசவாளர் காலனியில் நீடிக்கும் அவலம்
--பெயரளவில் கூட அடிப்படை வசதிகள் இல்லை சஞ்சய் காந்தி நெசவாளர் காலனியில் நீடிக்கும் அவலம்
--பெயரளவில் கூட அடிப்படை வசதிகள் இல்லை சஞ்சய் காந்தி நெசவாளர் காலனியில் நீடிக்கும் அவலம்

ரோடு வசதி இல்லை
முருகன், கூலித்தொழிலாளி, சஞ்சய் காந்தி காலனி: மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கோட்டைப்பட்டி செல்லும் ரோட்டை பலமுறை புதுப்பித்துள்ளனர். ஆனால் கோட்டைப்பட்டியில் இருந்து சஞ்சய் காந்தி நெசவாளர் காலனிக்கு வரும் ரோடு 20 ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. கற்கள் பெயர்ந்து குழந்தைகள், முதியோர் நடமாட முடியாத அளவில் சேதம் அடைந்துள்ளது. நெசவாளர் குடியிருக்கும் காலனிக்கு மட்டும் தார் ரோடு வசதி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு மனம் இல்லை. கலிக்கம்பட்டி ஊராட்சியின் சஞ்சய் காந்தி நெசவாளர் காலனி தனித்து விடப்பட்ட தீவு போன்று புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
அதிகாரிகள் அலட்சியம்
இந்திராணி, குடும்பத் தலைவி, சஞ்சய் காந்தி காலனி : குடியிருப்போர் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் , ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம் இதுவரை சாக்கடை வசதி செய்து தரவில்லை. பல இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரோடு, சாக்கடை, தெருவிளக்கு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறுகின்றனர். போக்குவரத்து, குடிநீர் வசதிக்காக சிரமப்படுவது மட்டுமின்றி விஷ பூச்சிகளால் அடிக்கடி பலர் பாதிப்படையும் அவலம் தொடர்கிறது.
கொசுத்தொல்லை தாராளம்
அன்னபூரணி, குடும்பத் தலைவி, சஞ்சய் காந்தி நெசவாளர் காலனி : குடியிருப்புகளின் நுழைவுபகுதி முதல் கோட்டைப்பட்டி வரை தார் ரோடு உள்ளது. ஆனால் குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் ரோடு வசதி இல்லை. ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் அடிப்படை வசதிகளை வழங்குவதில் பாராமுகமாக உள்ளனர். இப்பகுதி முழுவதும் புதர் மண்டி கிடப்பதால், பாம்புகள், பூரான், தேள் போன்ற விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. பகல் நேரங்களிலும் கொசு, வண்டு, பூச்சி தொல்லை உள்ளது.
தண்ணீருக்காக தவிப்பு
நவீனா ,குடும்ப தலைவி, கோட்டைப்பட்டி காலனி : 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்குதியில் வசிக்கிறோம். 4 நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரத்திற்கும் குறைவான தண்ணீர் வினியோகம் நடக்கிறது. போதிய தண்ணீர் கிடைக்காமல் சமையல், குடிநீர், சலவை உபயோகங்களுக்காக ஒவ்வொரு குடும்பமும் அவதிக்குள்ளாகும் அவலம் நீடிக்கிறது. இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்த போதும் அங்கன்வாடிக்காக கோட்டைப்பட்டி, செட்டியபட்டி போன்ற பிற இடங்களுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. இங்கு புதிதாக அங்கன்வாடி மையம் ஏற்படுத்த வேண்டும்.-