ADDED : ஜூன் 15, 2024 06:39 AM
கன்னிவாடி : அஷ்டமியை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், நந்தி, உற்ஸவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
திருவாசக முற்றோதலுடன் மகா தீபாராதனை நடந்தது. உற்ஸவர் பிரகார வலம், அன்னதானம் நடந்தது. செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனைகள் நடந்தது.