ADDED : ஜூலை 12, 2024 07:47 AM

நிலக்கோட்டை: மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியம் வழங்க பணி நிரந்தரம் செய்யும் அரசாணை 56 ஐ அமல்படுத்திட, மகப்பேறு விடுமுறை, நீதிமன்றம் உத்தரவுப்படி நிலுவை தொகை வழங்குதல், 12 மாதங்களும் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , பதாகைகளுடன் நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கவுரவ பேராசிரியர் கோகிலா தலைமை வகித்தார்.