/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரசு கல்லுாரியில் யோகா தினம் அனுசரிப்புஅரசு கல்லுாரியில் யோகா தினம் அனுசரிப்பு
அரசு கல்லுாரியில் யோகா தினம் அனுசரிப்பு
அரசு கல்லுாரியில் யோகா தினம் அனுசரிப்பு
அரசு கல்லுாரியில் யோகா தினம் அனுசரிப்பு
ADDED : ஜூன் 22, 2024 12:32 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் ரவி தலைமை வகித்தார்.
பேராசிரியர்கள் புருஷோத்தமன், ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பேராசிரியர் ரமேஷ் வரவேற்றார். இந்திராகாந்தி தேசிய பழங்குடியின மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் அன்பரசு யோகா குறித்து பேசினார். தற்கால சமூகத்தில் யோகாவின் அவசியம் பற்றியும், மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் யோகாவின் பங்கு குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட மாணவி மீனா நன்றி கூறினார்.* தர்மபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவர் படையை சேர்ந்த, 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் தங்கவேல் யோகா பயிற்சியை துவக்கி வைத்து, யோகா பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கினார். மூச்சு பயிற்சி, வஜ்ராசனம், நாடி சுத்தி, பத்மாசனம் என பல்வேறு யோகாசனம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, தர்மபுரி என்.சி.சி., அலுவலர் முருகேசன், அதியமான்கோட்டை என்.சி.சி., அலுவலர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.இதேபோல், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் சிந்தியாசெல்வி முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குpர் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர். பாலக்கோடு அரசு ஆண்கள் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் லட்சுமணன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு யோகா பயிற்சிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ரங்கநாதன், அறிவழகன், மாதேஸ் ஆகியோர் செய்திருந்தனர்.