Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரூ.1.98 கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம்

ரூ.1.98 கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம்

ரூ.1.98 கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம்

ரூ.1.98 கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம்

ADDED : ஜூன் 17, 2025 02:19 AM


Google News
பென்னாகரம், பென்னாகரம் போடூர், 4 சாலை சந்திப்பு பகுதி முதல் நடேசன் காட்டு கொள்ளை பகுதி வரை, 3 கி.மீ., தொலைவிற்கு, 2025 --26ம் ஆண்டு நபார்டு திட்டத்தில், 1.98 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி தலைமை வகித்தார்.

பென்னாகரம் தொகுதி, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., இன்பசேகரன் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், பேரூராட்சி துணைத்தலைவர் வள்ளியம்மாள் மற்றும் அனைத்து கட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us