Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

ADDED : ஜூன் 21, 2025 01:37 AM


Google News
தொப்பூர், தர்மபுரி டவுன், அண்ணாமலை கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுமதி, 47, இவருடைய கணவர் சத்திய நாராயணன் இறந்துவிட்ட நிலையில், முகேஷ் குமார், கோகுல் என இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த, 15 அன்று சுசூகி அசெஸ் ஸ்கூட்டரில் கோகுல், சுமதி இருவரும் ஜருகு - நல்லம்பள்ளி சாலையில், தாசன்கொட்டாய் அருகே வேகத்தடையில் கவன குறைவாக சென்றதால், சுமதி நிலைதடுமாறி சாலையில் விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் காலை சுமதி இறந்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us