Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

ADDED : ஜூன் 03, 2025 01:44 AM


Google News
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை வி.ஏ.ஓ., (பொறுப்பு) ஹரிஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், தேன்கனிக்கோட்டை - ஜவளகிரி சாலையிலுள்ள ஆவின் குளிரூட்டும் மையம் அருகே, நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அவ்வழி யாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, தேன்

கனிக்கோட்டையிலிருந்து ஜவளகிரிக்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 4 யூனிட் மண் கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

* சாலமரத்துப்பட்டி வி.ஏ.ஓ., சென்னகேசவன் மற்றும் அதிகாரிகள் கும்மனுார் கூட்ரோடு அருகே ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிராக்டரை சோதனையிட்டதில், ஒரு யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. கல்லாவி போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us