Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஓசூரில் வாகன நெரிசலை குறைக்க தர்மபுரியில் போக்குவரத்து மாற்றம்

ஓசூரில் வாகன நெரிசலை குறைக்க தர்மபுரியில் போக்குவரத்து மாற்றம்

ஓசூரில் வாகன நெரிசலை குறைக்க தர்மபுரியில் போக்குவரத்து மாற்றம்

ஓசூரில் வாகன நெரிசலை குறைக்க தர்மபுரியில் போக்குவரத்து மாற்றம்

ADDED : ஜூலை 01, 2025 01:26 AM


Google News
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில், கடந்த, 21ல் பேரிங் பழுதானதால், கனரக வாகனங்கள், நான்கு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஓசூர் சிப்காட் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர் செல்லும் வாகனங்களை, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, நேற்று முதல் நெடுஞ்சாலைத் துறையினர், மாற்றி விடுகின்றனர்.

இதனால், தர்மபுரி -- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி வழியாக, என்.ஹெச்.,44ல் செல்லும் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களை, தர்ம

புரியில் இருந்து பாலக்கோடு ராயக்கோட்டை, ஓசூர் வழியாக, கர்நாடக மாநிலம் நல்லுாருக்கு அமைக்கப்பட்டு வரும் புதிய தேசிய நெடுஞ்சாலை என்.ஹெச்., 844 வழியாக, தர்மபுரி அருகே பட்டர்பிளை பாலம் பகுதியில் இருந்து பிரித்து அனுப்பப்படுகிறது. இதன் மூலம், ஓசூர், பெங்களூரு, மைசூர் செல்வோர் ஓசூர் நகருக்குள் செல்லாமல், வெளிவட்ட சாலையில், எளிதில் கடந்து செல்ல முடியும். இதன் மூலம், ஓசூரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைய வாய்ப்புள்ளதாக, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us