Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்

ADDED : மே 12, 2025 03:53 AM


Google News
ஒகேனக்கல்: வார விடுமுறையான நேற்று, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக ஒகேனக்கல் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று, 1,500 கன அடியாக சீராக வந்தது. கோடை விடுமுறையாகவும் உள்ள நிலையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். மசாஜ் செய்தும், காவிரியாற்றில் மெயின் பால்ஸ், சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர். பிரசித்தி பெற்ற மீன் குழம்பு சமைத்தும் சாப்பிட்டனர். மேட்டூர் அணையில் தொடர்ந்து, 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால், ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர் தேங்கி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு, பாறைகளுக்கு இடையே ஆற்றில் பரிசல் பயணம் செய்தனர். சின்னாறு பரிசல் துறையில் இருந்து மெயின் பால்ஸ், மணல் திட்டு, பெரியபாணி உள்ளிட்ட இடங்களுக்கு பரிசல் இயக்கப்பட்டதால், காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us