Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஆடு திருடி மாட்டிக் கொண்ட மாணவர்கள்

ஆடு திருடி மாட்டிக் கொண்ட மாணவர்கள்

ஆடு திருடி மாட்டிக் கொண்ட மாணவர்கள்

ஆடு திருடி மாட்டிக் கொண்ட மாணவர்கள்

ADDED : பிப் 11, 2024 01:18 AM


Google News
பாலக்கோடு:நள்ளிரவில் ஆடு திருடிய நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, மாரவாடியை சேர்ந்த விவசாயி ராஜன், 69. கடந்த, 8ம் தேதி தன் வீட்டின் வராண்டாவில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.

நள்ளிரவில் வெளியே வந்து பார்த்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல், ஒரு ஆட்டை பிடித்து காரில் ஏற்றி சென்றனர்.

ராஜன் புகார்படி மகேந்திரமங்கலம் போலீசார், ஆடு திருட்டில் ஈடுபட்ட சாமனுாரை சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவர்களான நவீன்குமார், 21, கொலசனஹள்ளி மனோஜ்குமார், 20, பொம்மனுார் சுனில்குமார், 20, டேனிக்தாமஸ், 19, ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us