Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விபத்தில் மாணவி பலி

விபத்தில் மாணவி பலி

விபத்தில் மாணவி பலி

விபத்தில் மாணவி பலி

ADDED : ஜூன் 24, 2025 01:52 AM


Google News
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேப்பள்ளியை சேர்ந்தவர் திரிஷா, 23. இவர், தர்மபுரி மாவட்டம், தொப்பூரிலுள்ள தனியார் கல்லுாரியில் எம்.பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 21 அன்று அவருடைய நண்பர் சிரஞ்சீவி, 23, என்பவருடன் யமஹா எம்.டி.,15 பைக்கில் மதியம், 2:50 மணிக்கு சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பென்னாகரம் மேம்பாலம் அருகே சென்றபோது,

முன்னாள் நின்றிருந்த டாடா இண்டிகா கார் மீது, மோதி விபத்துக்குள்ளாகினர். இதில், திரிஷா சம்பவ இடத்திலேயே பலியானார். சிரஞ்சீவி பலத்த காயங்களுடன், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us