Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சேதமான அரசு பள்ளி சுற்றுச்சுவர் அப்புறப்படுத்த வேண்டுகோள்

சேதமான அரசு பள்ளி சுற்றுச்சுவர் அப்புறப்படுத்த வேண்டுகோள்

சேதமான அரசு பள்ளி சுற்றுச்சுவர் அப்புறப்படுத்த வேண்டுகோள்

சேதமான அரசு பள்ளி சுற்றுச்சுவர் அப்புறப்படுத்த வேண்டுகோள்

ADDED : மார் 17, 2025 03:38 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி அருகே, சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள, அரசு பள்ளி சுற்றுச்சுவரை அப்புறப்படுத்த வேண்டு-மென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் பஞ்.,ல் ஊராட்சி ஒன்-றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 110 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி கட்டடம் சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், மாணவர்களின் பாதுகாப்புக்காக, பள்ளி கட்ட-டத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதில், தரமற்ற பணியின் காரணமாக, சுற்றுச்சுவர் பல இடங்களில் விரிசல-டைந்து, சிமென்ட் கலவை பெயர்ந்து, செங்கல் மட்டும் உள்ளது. ஒரு மழை பெய்தாலே சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன், இடிந்து விழும் நிலையிலுள்ள சுற்றுச்சுவரை இடித்து

அப்புறப்படுத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us