Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று துவக்கம்

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று துவக்கம்

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று துவக்கம்

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று துவக்கம்

ADDED : செப் 10, 2025 01:32 AM


Google News
தர்மபுரி, தமிழக பள்ளி கல்வித்துறை, காலாண்டு தேர்வுகளை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு உரிய உத்தரவு மற்றும் வழிகாட்டல்களை வழங்கி உள்ளது. அதன்படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் செப்., 10 இன்று தொடங்கி, செப்., 25 வரை நடக்கவுள்ளது.

இது குறித்து, தர்மபுரி மாவட்ட சி.இ.ஓ., ஜோதிசந்திரா தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் இரு கட்டமாக நடக்கவுள்ளது. முதல் கட்டமாக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செப்., 10 முதல், 25 வரை நடக்கிறது. அடுத்ததாக, 6 முதல், 10ம் வகுப்புகளுக்கு செப்., 15 முதல், செப்., 26 வரை நடக்கவுள்ளது.தேர்வுகளை கண்காணித்து வழி நடத்த, தர்மபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய, 4 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, பிரத்யேக குழுக்களை கொண்டு, வினாத்தாள்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு குறித்து, தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 2024- - 25 கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற, 120 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us