Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இறைச்சி கடைகளால் துர்நாற்றம் பொதுமக்கள், பக்தர்கள் அவதி

இறைச்சி கடைகளால் துர்நாற்றம் பொதுமக்கள், பக்தர்கள் அவதி

இறைச்சி கடைகளால் துர்நாற்றம் பொதுமக்கள், பக்தர்கள் அவதி

இறைச்சி கடைகளால் துர்நாற்றம் பொதுமக்கள், பக்தர்கள் அவதி

ADDED : ஜூன் 06, 2025 01:38 AM


Google News
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட, செக்காம்பட்டிக்கு செல்லும் சாலை மற்றும் வர்ணதீர்த்தத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள தெருவில், இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இறைச்சி எடுக்கப்பட்ட நிலையில், மாட்டின் எலும்பு, கொம்பு, தோல் ஆகியவை வெட்ட வெளியில் கொட்டப்படுகின்றன. இறைச்சி கழிவுகளால், துர்நாற்றம் வீசுவதால், பகுதிவாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், இறைச்சிக்காக நாய்கள் சுற்றுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

அதே போல், வர்ணீஸ்வரர் கோவில் எதிரில், செயல்படும் இறைச்சி கடைகளில் இருந்து ஆடு, கோழி ஆகியவற்றின் கழிவுகள் அங்குள்ள ராஜகால்வாயில் கொட்டப்படுவதால் பக்தர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல், மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் பரிதாபம் உள்ளது. எனவே, சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில், நடந்து கொள்ளும் இறைச்சி கடைக்காரர்கள் மீது, அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us