Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தீர்த்தமலை வனத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களால் சீர்கேடு

தீர்த்தமலை வனத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களால் சீர்கேடு

தீர்த்தமலை வனத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களால் சீர்கேடு

தீர்த்தமலை வனத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களால் சீர்கேடு

ADDED : செப் 03, 2025 02:09 AM


Google News
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும், 2,000க்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்த்தமலை அடிவாரத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையில், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிந்துள்ளன.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையுள்ளது. எனவே, தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதுடன், தீர்த்தமலை கோவிலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல, நிரந்தர தடை விதிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us