Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் குறைதீர் முகாம்

போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் குறைதீர் முகாம்

போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் குறைதீர் முகாம்

போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் குறைதீர் முகாம்

ADDED : ஜூலை 10, 2024 06:47 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம், மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் நடக்கிறது.

அதேபோல், போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்கள் மனுக்கள் மீதான குறை தீர்க்கும் முகாம் நடத்த, மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் அறிவுறுத்தினார். அதன்படி நேற்று, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் குறைதீர் முகாம், இன்ஸ்பெக்டர் வேலுதேவன் தலைமையில் நடந்தது. இதில், 70 மனுக்கள் பெறப்பட்டு அதன் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டன. இதில், எஸ்.ஐ.,க்கள் ரங்கசாமி, இளமதி உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us