Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நுகர்பொருள் வாணிப கழக குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால் மக்கள் அவதி

நுகர்பொருள் வாணிப கழக குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால் மக்கள் அவதி

நுகர்பொருள் வாணிப கழக குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால் மக்கள் அவதி

நுகர்பொருள் வாணிப கழக குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால் மக்கள் அவதி

ADDED : மே 26, 2025 05:41 AM


Google News
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், மொரப்பூர் செல்லும் சாலையில், அரசு மருத்துவமனை அருகில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது.

இங்கு அரூர் பகுதியிலுள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் டன் கணக்கில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்நிலையில் குடோனில் இருந்து வரும் வண்டுகளால் மிகவும் அவதிக்கு ஆளாகி வருவதாக, பொது-மக்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: அரூர் திரு.வி.க., நகர் மேற்கு பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்-திற்கு சொந்தமான அரிசி குடோனில் அரிசி மூட்டைகள் மாதக்க-ணக்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், சிறிய வண்டுகள் அந்த அரிசியில் உருவாகி உள்ளன.

இந்த வண்டுகள், திரு.வி.க., நகர் மேற்கு பகுதியிலுள்ள வீடுக-ளுக்குள் வருவதால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அவை கடிப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவதுடன், தோலில் ஒவ்வாமை நோய் ஏற்படும் நிலையுள்ளது. மேலும், உடலில் வண்டுகள் ஊர்வதால், இரவில் துாக்கத்தை தொலைத்து தவித்து வருகின்றனர். வீட்டிலுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களிலும் வண்டுகள் குவிந்து கிடக்கின்றன. எனவே, வண்டுகள் குடியிருப்பு பகுதிக்கு வருவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us