/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மனைவியை கொடுவாளால் வெட்டிய கணவர் கைது மனைவியை கொடுவாளால் வெட்டிய கணவர் கைது
மனைவியை கொடுவாளால் வெட்டிய கணவர் கைது
மனைவியை கொடுவாளால் வெட்டிய கணவர் கைது
மனைவியை கொடுவாளால் வெட்டிய கணவர் கைது
ADDED : மே 27, 2025 02:09 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி குப்பனுாரை சேர்ந்தவர் மாதேஷ், 45. கூலித்தொழிலாளி. இவரது மகள் ரம்யா, 22. இவரது கணவர், சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டணத்தை சேர்ந்த அய்யனார், 25. இவர்களுக்கு, 2 பெண் குழந்தைகள். கடந்த, ஒரு மாதத்திற்கு முன் மாமியார் மலருக்கும், ரம்யாவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் கோபித்துக் கொண்டு ரம்யா குப்பனுாரில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
நேற்று மதியம் அய்யனார் குப்பனுார் வந்து, ரம்யாவிடம் வாய் தகராறில் ஈடுபட்டு கொடுவாளால் அவரது தலை, கை, காது, வயிற்று பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் காயமடைந்த ரம்யா, குடல் சரிந்து படுகாயம் அடைந்தார். இதை தடுக்க சென்ற ரம்யாவின் பாட்டியை தள்ளியதில் அவரும் காயமடைந்தார். பின் அங்கிருந்தவர்கள் ரம்யா, சென்னம்மாளை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பொம்மிடி போலீசார் அய்யனாரை கைது செய்தனர்.