Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு பள்ளி மாணவர்கள் கால் அமுக்கிய விவகாரம் ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'

அரசு பள்ளி மாணவர்கள் கால் அமுக்கிய விவகாரம் ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'

அரசு பள்ளி மாணவர்கள் கால் அமுக்கிய விவகாரம் ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'

அரசு பள்ளி மாணவர்கள் கால் அமுக்கிய விவகாரம் ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'

ADDED : செப் 03, 2025 11:27 PM


Google News
அரூர்:அரூர் அருகே, அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு, மாணவர்கள் கால் அமுக்கிய வீடியோ வைரலான நிலையில், அந்த தலைமைஆசிரியையை 'சஸ்பெண்ட்' செய்து, டி.இ.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாவேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் தலைமையாசிரியை உட்பட, இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

மாணவ, மாணவியர் சிலர், வகுப்பறையிலுள்ள பெஞ்சில் படுத்திருக்கும் தலைமையாசிரியை கலைவாணியின் கை, கால்களை பிடித்து, அமுக்கி விடும் வீடியோ பரவியது.

இதையடுத்து, நேற்று முன்தினம் காலை பள்ளியை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பள்ளிக்கு வந்த அரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் விஜயகுமார், விசாரணை நடத்தி, தலைமையாசிரியை கலைவாணியை, வேறு பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தர விட்டார். தொடர்ந்து அவரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us