Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர் பெயரில் மரக்கன்று

அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர் பெயரில் மரக்கன்று

அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர் பெயரில் மரக்கன்று

அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர் பெயரில் மரக்கன்று

ADDED : ஜூன் 20, 2025 01:21 AM


Google News
தர்மபுரி, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தர்மபுரி ஒன்றியம், மூக்கனஹள்ளி உயர் நிலைப்பள்ளி பொறுப்பாசிரியர் விக்ரமன் தலைமையில், தேசிய பசுமைப்படை சார்பாக, மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, அவர்களின் பெயர் சூட்டிய மரக்கன்றுகளை, பள்ளி வளாகத்தில் நட வைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் பெற்றோரை, பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் நெடுமாறன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மூக்கனஹள்ளி தேசிய பசுமைப்படை அமைப்புடன் இணைந்து, மிஷன் இயற்கை அமைப்பு செய்திருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us