ADDED : மே 31, 2025 06:50 AM
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் வாரச்சந்தைக்கு நேற்று, 320க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 7,800 முதல், 8,200 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையில், 24 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.