Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மழையால் சாய்ந்த நெற்கதிர்கள் கவலையில் விவசாயிகள்

மழையால் சாய்ந்த நெற்கதிர்கள் கவலையில் விவசாயிகள்

மழையால் சாய்ந்த நெற்கதிர்கள் கவலையில் விவசாயிகள்

மழையால் சாய்ந்த நெற்கதிர்கள் கவலையில் விவசாயிகள்

ADDED : மே 10, 2025 01:50 AM


Google News
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, மாம்பட்டி, கீரைப்பட்டி, பறையப்பட்டி, தாமலேரிப்பட்டி, வடுகப்பட்டி, தொட்டம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக, நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் பெய்த மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் விளை நிலங்களில் சாய்ந்துள்ளது.

மேலும், தற்போது, வயல்களில் ஈரப்பதம் அதிகளவில் உள்ளதால், நெல் அறுவடை செய்ய மிஷினை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us