Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவருக்கு 5 ஆண்டு சிறை

ADDED : செப் 11, 2025 01:13 AM


Google News
தர்மபுரி, தர்மபுரி அருகே, சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் முதியவருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்தவர் பொன்னன், 67. இவர் தனக்கு பேத்தி முறையான, 14- வயது சிறுமியை கடந்த, 2022 செப்., 21 அன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் படி, பொன்னனை, பொம்மிடி போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த, தர்மபுரி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி பொறுப்பு மோனிகா, பொன்னனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us