Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர் கண்டக்டருக்கு பாராட்டு

தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர் கண்டக்டருக்கு பாராட்டு

தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர் கண்டக்டருக்கு பாராட்டு

தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர் கண்டக்டருக்கு பாராட்டு

ADDED : ஜூன் 14, 2025 06:57 AM


Google News
தர்மபுரி: அரசு பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட, நான்கரை பவுன் நகையை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டரை போக்குவரத்து கழக பொதுமேலாளர் பாராட்டினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தர்மபுரி மண்டலத்திற்-குட்பட்ட திருப்பத்துார்--ஓசூர் வழித்தடத்தில் இயக்கப்படும் புற-நகர் பஸ்சில் கடந்த, 12ம் தேதி மாலை, 6:00 மணிக்கு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர், அவருடைய தங்க நகையை தவ-றவிட்டு சென்றது தெரியவந்தது. டிரைவர் கவியரசு, கண்டக்டர் வேலு ஆகியோர் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் பொறுப்பாள-ரிடம் பர்சுடன் தங்க நகையை ஒப்படைத்தனர்.இது குறித்து விசாரித்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரை சேர்ந்த ஜெயலஷ்மி என்பவர் பஸ்சில் நகையை தவறவிட்டு சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, பர்சுடன், நான்-கரை பவுன் நகையை ஜெயலஷ்மியிடம் ஒப்படைக்கப்பட்டது. டிரைவர் கவியரசு, கண்டக்டர் வேலு ஆகியோரை தர்மபுரி மண்-டல பொது மேலாளர் செல்வம் பரிசு வழங்கி பாராட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us