Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பாதுகாப்பு கேட்டு போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

ADDED : ஜூன் 09, 2025 03:59 AM


Google News
மாரண்டஹள்ளி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த அமானி மல்லா-புரம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சேரன், 21. இவர், பாலக்-கோடு அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்-ளோமா இன்ஜினியரிங் மூன்றாமாண்டு படிக்கிறார். மாரண்ட-ஹள்ளி அடுத்த கெண்டேயனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் திரிஷா, 20. இவர், நாமக்கல் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இருவரும், பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 6ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சேலத்திலுள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, நண்பரின் வீட்டில் தங்கியிருந்தனர். பெற்றோர் தேடுவதை அறிந்து நேற்று மாரண்டஅள்ளி போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்ச-மடைந்தனர். போலீசார் தகவலின் படி, இருவரின் பெற்றோரும், ஸ்டேஷனுக்கு வந்தனர். அங்கு, திரிஷாவின் பெற்றோர் திரும-ணத்தை ஏற்கவில்லை. ஆனால், திரிஷா, சேரனுடன் தான் செல்வேன் என கூறியதால், போலீசார் காதலனுடன், காதலியை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us