Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தேசியக்கொடியுடன் பா.ஜ.,வினர் ஊர்வலம்

தேசியக்கொடியுடன் பா.ஜ.,வினர் ஊர்வலம்

தேசியக்கொடியுடன் பா.ஜ.,வினர் ஊர்வலம்

தேசியக்கொடியுடன் பா.ஜ.,வினர் ஊர்வலம்

ADDED : மே 31, 2025 06:49 AM


Google News
தர்மபுரி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பயங்கரவாதிகள் முகாம் மற்றும் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய, சிந்துார் ராணுவ தாக்குதல் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், இந்திய படைக்கு நன்றி தெரிவித்தும், நேற்று பாலக்கோடு நகர, பா.ஜ., சார்பில், மூவர்ணக்கொடி வெற்றி ஊர்வலம் நடந்தது.

நகர தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சங்கீதா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். பாலக்கோடு தக்காளி மண்டியில் துவங்கிய பேரணி, முக்கிய கடைவீதிகள் வழியாக பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கணேசன், முன்னாள் மீனவர் அணி மாவட்ட தலைவர் மாதையன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us