ADDED : செப் 15, 2025 01:45 AM
அதியமான்கோட்டை:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தேவரசம்பட்டியை சேர்ந்த சோனியா, 37. இவர் அதியமான்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம், 19 அன்று, சோனியாவின் கணவர் சுரேஷுக்கு சொந்தமான பஜாஜ் பல்சர் பைக்கை, வீட்டில் நிறுத்தி விட்டு சென்றனர்.
மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, பைக் காணவில்லை. இது குறித்து, சோனியா அளித்த புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.