ADDED : செப் 16, 2025 02:15 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூரில், திங்கட்கிழமைதோறும் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில், ஒரு கிலோ ஆப்பிள், அளவு மற்றும் தரத்தை பொறுத்து, 80 முதல், 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
சிம்லாவில் இருந்து ஆப்பிள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.