ADDED : ஜூன் 22, 2024 12:32 AM
மாரண்டஹள்ளி : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மாரண்டஹள்ளி எஸ்.ஐ., முருகன் ரோந்து சென்றார். அப்போது செவத்தம்பட்டியை சேர்ந்த ராஜி, 65, என்பவர் மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.அதேபோல், திருமல்வாடியைச் சேர்ந்த லீனா, 48, என்பவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த, 32 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.