ADDED : ஜூலை 09, 2024 06:03 AM
பொம்மிடி: பொம்மிடி அடுத்த வடசந்தையூரை சேர்ந்தவர் அஜிஸ்.
இவர், வழக்கம் போல், நேற்று அதே பகுதியிலுள்ள தன் விவசாய தோட்டத்திற்கு சென்றார். அப்போது, 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு படையினர், உடலை மீட்டனர். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.