Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ முகாமில் 87 மனுக்களுக்கு தீர்வு

முகாமில் 87 மனுக்களுக்கு தீர்வு

முகாமில் 87 மனுக்களுக்கு தீர்வு

முகாமில் 87 மனுக்களுக்கு தீர்வு

ADDED : மே 29, 2025 01:19 AM


Google News
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில் தீர்வு காணப்படாத பல்வேறு வழக்குகளில், சுமூகமாக தீர்வு காணும் வகையிலும், புதிய புகார்களை விரைந்து முடிக்கும் வகையிலும், மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று பொதுமக்கள், தங்கள் குறைகளை கூறும் வகையில் பெட்டிஷன் மேளா எனும் பொதுமக்கள் குறை தீர் முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.

காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடந்த முகாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களின் மனுக்களை, ஏ.டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன் முன்னிலையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ,.,க்கள் விசாரித்தனர். இதில், 87 மனுக்கள் விசாரிக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது. நேற்று புதிதாக வழங்கப்பட்ட, 29 மனுக்கள் விசாரிக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என போலீசார்

தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us