Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வாடகை காரை விற்ற 3 வாலிபர்கள் கைது

வாடகை காரை விற்ற 3 வாலிபர்கள் கைது

வாடகை காரை விற்ற 3 வாலிபர்கள் கைது

வாடகை காரை விற்ற 3 வாலிபர்கள் கைது

ADDED : மே 27, 2025 02:07 AM


Google News
தர்மபுரி, தர்மபுரி அடுத்த ஏ.கொல்லஹள்ளியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 35. இவர், சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு விட்டு தொழில் செய்கிறார். மதிகோண்பாளையத்தை சேர்ந்த முகேஷ், 27, என்பவர் வாடகைக்கு கார் கேட்டுள்ளார். கடந்த, 11ல் மதியம், 3:00 மணிக்கு பிரவீன்குமார் அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர், முகேஷியிடம் இனோவா காரை கொடுத்துள்ளனர். 2 நாட்கள் கழித்து முகேஷியிடம் கார் கேட்டபோது, எடுத்து வருவதாக கூறியவர்,

மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். விசாரித்ததில் முகேஷ் கோடுப்பள்ளத்தை சேர்ந்த முனியப்பன், 25, என்பவருடன் மேட்டுப்பாளையம் சென்று, முகமது ரியாஸ், 26, பாதுார்ஷா ஆகியோரிடம், 2 லட்சம் ரூபாய்க்கு அக்காரை விற்றது தெரிந்தது. பிரவீன்குமார் புகார் படி, தர்மபுரி போலீசார் வழக்குப்பதிந்து, முகேஷ், முனியப்பன் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். தலைமறைவான பாதுார்ஷாவை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us