Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பெண்ணுக்கு மொபைல்போனில் டார்ச்சர்; ராணுவ வீரர் மீது வழக்கு

பெண்ணுக்கு மொபைல்போனில் டார்ச்சர்; ராணுவ வீரர் மீது வழக்கு

பெண்ணுக்கு மொபைல்போனில் டார்ச்சர்; ராணுவ வீரர் மீது வழக்கு

பெண்ணுக்கு மொபைல்போனில் டார்ச்சர்; ராணுவ வீரர் மீது வழக்கு

ADDED : ஜூன் 06, 2024 04:26 AM


Google News
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மாரியம்பட்டியை சேர்ந்தவர் இளவரசன், 39; ராணுவ வீரர்.

இவரது மனைவி நந்தினி; கருத்து வேறுபாடால் கடந்த, 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். நந்தினி பட்டுகோணாம்பட்டியிலுள்ள தாய் வீட்டில் வசிக்கிறார்.இந்நிலையில் இளவரசன் தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கேட்டு, நந்தினியின் தம்பி ராபீன் மனைவி ரம்யாவிடம் மொபைல்போனில் பேசியுள்ளார். தொடர்ந்து அவருக்கு கடந்த, 6 மாதங்களாக மொபைல்போனில் மெசேஜ் அனுப்பி, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என, டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதையறிந்த ராபீன் அரளி விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் ரம்யா புகார் படி, ராணுவ வீரர் இளவரசன் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us