Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.50 லட்சம் பறித்தவர் மீது பெண் புகார்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.50 லட்சம் பறித்தவர் மீது பெண் புகார்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.50 லட்சம் பறித்தவர் மீது பெண் புகார்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.50 லட்சம் பறித்தவர் மீது பெண் புகார்

ADDED : ஆக 03, 2024 01:17 AM


Google News
தர்மபுரி, தர்மபுரி அருகே, குமாரசாமிபேட்டையை சேர்ந்த தீபா, 30; இவர் மனிதவளத மேம்பாட்டுதுறையில் மேலாளராக உள்ளார். கடந்த அக்.,15ல் சென்னை செம்மன்சேரியை சேர்ந்த விக்னேஷ்வர், 34; மேட்ரிமோனி மூலம், அறிமுகமாகி, திருமணம் செய்து கொள்வதாக தொடர்பு கொண்டு உள்ளார். தொடர்ந்து, விக்னேஸ்வர் தன் தந்தை மற்றும் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என, அவ்வப்போது, பணம் கேட்டுள்ளார்.

இதில், தீபா, 50 லட்சம் வரை நகை அடகு வைத்து மற்றும் வங்கிகளில் கடன் பெற்று கொடுத்துள்ளார். ஆசை வார்த்தை கூறியதை நம்பி, தீபா சென்னை சென்று பார்த்தபோது, அனைத்தும் பொய் என தெரிய வந்தது. இது குறித்து, தீபா கேட்டபோது, விக்னேஸ்வர் சில புகைப்படங்களை வெளியிட்டு மனரீதியாக தொந்தரவு செய்துள்ளார். விக்னேஸ்வர் வாங்கிய, 50 லட்சத்தில், 25 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார்.

மீதி பணத்தை கேட்டபோது, அவரின் குடும்பத்தார் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து, தீபா அளித்த புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us