Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.35 லட்சம் கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.35 லட்சம் கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.35 லட்சம் கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.35 லட்சம் கன அடியாக சரிவு

ADDED : ஆக 02, 2024 08:29 PM


Google News
ஒகேனக்கல்,:கர்நாடக அணைகளில் திறக்கப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று, வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடியாக சரிந்தது.

கர்நாடக, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு, உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகவில் உள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது நீர்வரத்துக்கு ஏற்ப அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு, 1.47 லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று கபினியில் இருந்து வினாடிக்கு, 47,917 கன அடியும், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து வினாடிக்கு, 97,749 கன என, இரு அணைகளிலிருந்தும் மொத்தம், ஒரு லட்சத்து, 45,666 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில், தமிழக எல்லையான பிலுகுண்டுலுவில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வினாடிக்கு, 2.10 லட்சம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீர் வரத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 1.35 லட்சம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இதனால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைப்பாதையை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தோடுகிறது. சத்திரம், ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதியில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தவாறு தண்ணீர் பாய்ந்தோடுகிறது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடகாக மாறியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us