/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வழிகாட்டி பெயர் பலகை வைக்க மக்கள் கோரிக்கை வழிகாட்டி பெயர் பலகை வைக்க மக்கள் கோரிக்கை
வழிகாட்டி பெயர் பலகை வைக்க மக்கள் கோரிக்கை
வழிகாட்டி பெயர் பலகை வைக்க மக்கள் கோரிக்கை
வழிகாட்டி பெயர் பலகை வைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 18, 2024 01:45 AM
அரூர்: அரூர் கச்சேரிமேட்டில், தர்மபுரி, திருப்பத்துார்,- சேலம்,- அரூர் நக-ருக்குள் செல்லும் வழி என, 4 சாலை சந்திப்பு உள்ளது. இங்கு வழிகாட்டி பெயர் பலகை எதுவும் இல்லாததால், வெளி மாவட்-டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஓட்டு-னர்கள், கனரக வாகனங்களை அரூர் நகருக்குள் ஓட்டிச்செல்கின்-றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதை தடுக்க, செல்ல வேண்டிய சாலை குறித்த திசைகளுடன் கூடிய வழிகாட்டி பெயர் பலகை வைக்க, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனநிலை பாதித்த பெண் மாயம்
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த வேப்பமரத்துாரை சேர்ந்தவர் மணிவண்ணன், 51, கூலித்தொழிலாளி; இவரது மனைவி காளியம்மாள், 45; மன-நிலை பாதித்தவர். மணிவண்ணனும், இவரது மகன் பாலகிருஷ்-ணனும், பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வருகின்-றனர். மாதம் ஒரு முறை வீட்டிற்கு வருகின்றனர். தனியாக வீட்டி-லிருந்த காளியம்மாள் குரும்பட்டியிலுள்ள தன் சகோதரர் வீட்-டிற்கு கடந்த, 2 ல் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று மணிவண்ணன் புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்-கின்றனர்.