/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆடி பண்டிகையில் மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம் ஆடி பண்டிகையில் மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்
ஆடி பண்டிகையில் மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்
ஆடி பண்டிகையில் மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்
ஆடி பண்டிகையில் மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்
ADDED : ஜூலை 18, 2024 01:46 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று, ஆடிப்பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன், அழிஞ்சி மரக்குச்சியில், தேங்-காயை கோர்த்து, பாசிப்பருப்பு, அவல், வெல்லம் உள்ளிட்டவை-களை சேர்த்து, தீயில் சுட்டனர். பின், அவற்றை சுவாமிக்கு படைத்து வழிபட்ட பின், அனைவருக்கும் வழங்கி
மகிழ்ந்தனர்.
2 வீடுகளில் 10 பவுன் நகை திருட்டு
தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே, சாமிசெட்டிபட்டியை சேர்ந்த மாதேஷ், 51; இவர் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். கடந்த மே, 1 அன்று அவரது வீட்டிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த, 5 பவுன் நகை திருட்டு போனது. அதேபோல், ஏலகிரி அடுத்த, போலம்பட்டியை சேர்ந்த பொட்டியம்மாள், 41. விவசாய கூலி. கடந்த மே, 1 அன்று இவ-ரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 5 பவுன் நகை திருட்டு போனது. புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்-கின்றனர்.