Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

ADDED : ஆக 02, 2024 03:39 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில், நேற்று நகரமன்ற சாதாரண கூட்டம், சேர்மன் லட்சுமி தலைமையில் நடந்தது. நகரமன்ற துணைத்தலைவர் நித்யா முன்னிலை வகித்தார். கமிஷனர் புவ-னேஸ்வரன், கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.

தர்மபுரி நகராட்சி சார்பில், ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பல்-வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், புதிய திட்ட பணிக-ளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணியாணை வழங்-குதல், பொதுக்கழிப்பிடம், இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைத்தல் உள்ளிட்ட, 28 பொருட்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான, திட்ட பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கவுன்சிலர்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். குறிப்-பாக, தர்மபுரி நகரில் அனைத்து வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது.

தெரு நாய்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டது. நாய்கள் கடித்து இதுவரை, 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்து-வமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, நகராட்சி நிர்-வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு நகரமன்ற தலைவர் மற்றும் கமி-ஷனர் பதிலளித்து பேசுகையில், 'தர்மபுரி நகரில் நாய்களை பிடிக்க, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நகரிலுள்ள அனைத்து சாக்கடை கால்வாய்க-ளையும் துார்வாரும் பணி தொடர்ந்து நடக்கிறது. வார்டுகளில் தேவைகள் அறிந்து பூர்த்தி செய்யப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us